Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:27:31 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameHameed Rifai
PlaceJeddah (KSA)
Approved Comments99
Rejected Comments5
கருத்துக்கள்
எண்ணிக்கை
99
பக்க எண்
1/10
பக்கம் செல்ல
செய்தி: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி நிர்வாகிகளுடன், ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு! வீடியோ பதிவு வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Hameed Rifai (Jeddah (KSA)) [24 August 2016]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44499

அன்பின் ஆதம் சுல்தான் காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்...

ஐக்கியப் பேரவை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நமதூரின் ஒரு தனி நபரைக் கண்டித்து நடத்தப்பட்டது மட்டுமல்ல, அந்த தனிநபரை - அவர் இந்த ஊரின் அவலம் - ஊரில் குடியிருக்கவே தகுதியற்றவர் என்பது போல் சித்தரித்து, அவர் பொறுப்பு வகிக்கும் ஜமாஅத் நிர்வாகத்தைக் கைப்பற்றப் போவதாகவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மொத்தத்தில், நமதூரின் ஒரு குடிமகனுக்கும் - ஒரு ஜமாஅத்திற்கும் எதிராக நடத்தப்பட்டதே அந்த (ஆராயாத - ஆராய முற்படாத - ஆராய வேண்டும் என பலரால் வலியுறுத்தப்பட்டும் கண்டுகொள்ளாமல் நடத்தப்பட்ட இந்த) ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்தை நடத்தியது தனிநபரையும், ஜமாஅத்தையும் இணைத்தே என்பதால், அதற்கான விளக்கமும் இரண்டையும் இணைத்தே வழங்கப்பட்டுள்ளது. ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இரண்டையும் இணைத்ததன் காரணமாகவே, இரண்டுக்கும் இணைத்து பதில் கொடுக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்...

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கியப் பேரவையால் ஊருக்கு எந்த நன்மையும் இல்லை என்பது மட்டுமல்ல! அதன் கடந்த கால அனைத்து செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது, இந்த ஊரில் இயங்கத் தகுதியற்ற அமைப்பாகவே அதை நான் கருதுகிறேன்.

மொத்தத்தில், பேரவையைக் கொண்டு நமதூருக்கு நன்மையோ, இல்லையோ...... அதைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு சிலருக்கு ‘நிறைய்........ய’ நன்மைகள்! சில ஜமாஅத்துகளுக்கும், பல தனிநபர்களுக்கும், பல பொதுநல அமைப்புகளுக்கும் பெரும் தீமையே நடந்திருக்கிறது என்பதை விளக்கிட, ஒவ்வொன்றையும் மையப்படுத்தி தனித்தனி கட்டுரையே எழுத வேண்டும். அவ்வளவு சரக்கு உள்ளது.

“ஐக்கியப் பேரவை பிரதிநிதிகள் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி ஜமாத்தார்களை சந்த்தித்து விளக்கம் பெற சென்றார்களா?அல்லது தனிமனிதர் மஹ்மூது அவர்களுக்கும் ஐக்கியப் பேரவைஇங்கும் இடையில் (10 வருடத்திற்கு) முன்னால் நடந்த விவகாரத்தை பேச சென்றார்களா என்று தெரியவில்லை?” c&p

இவ்வாறு தாங்கள் கூறியிருக்கிறீர்கள்... ஒரு பேச்சுக்கு, உங்கள் கருத்துப் படி, ஒரு தனி நபரின் விளக்கத்தைக் கேட்பதற்காக பேரவையின் இந்தப் பிரதிநிதிகள் குழு சென்றது கேள்விக்குரியது என்றால்,

அதே தனிநபருக்கு எதிராக - நகரின் அனைத்து ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும் (அவர்களுக்கு உண்மை விவரங்களை மறைத்து, இருட்டடிப்பு செய்து, பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி, அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிட்டு) ஆர்ப்பாட்டம் நடத்திய செயல் மகா கொடூரம் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்???

தனது - தன் குடும்பத்துப் பிரச்சினைகளையெல்லாம் ஊர்ப் பிரச்சினையாக்கி, எல்லா ஜமாஅத் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள்... ஏன்? ஆலிம்களையெல்லாம் அழைத்து கோஷம் போட வைத்தது நமது “அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பான (???)” ஐக்கியப் பேரவை!

அதே நேரத்தில் ஊரின் முக்கியப் பிரச்சினைகளான கலாச்சார சீரழிவுகள், ஒழுக்கக் கேடுகள், இறைச்சி விலையேற்றம், இன்று நானும், தாங்களும் அங்கம் வகிக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நகரின் அனைத்து தரப்பு பொதுமக்களையும் அரவணைத்து, கையில் எடுத்து நடத்தி வரும் - ஆட்டோ கட்டண ஏற்றம், ஆட்டோ ஓட்டுநர்கள் (அனைவரும் அல்ல!) பலரின் தகாத நடவடிக்கைகள், நகராட்சியில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் செயல்படுத்தப்படாமலிருக்கும் அவலம், போக்குவரத்து நெரிசல்கள், நமதூரைப் புறக்கணித்து செல்லும் பேருந்துகளை மீண்டும் இவ்வழியில் இயக்குதல், மது ஒழிப்பு, சாலை விதிகளை மாணவர்கள் மதிக்கச் செய்தல்

என இப்படி ஊருக்கு அவசியமான - போர்க்கால அடிப்படையில் தலையிட்டு சரி செய்ய வேண்டிய பல பிரச்சினைகள் இருக்க, அவற்றையெல்லாம் யாருக்கோ, எவருக்கோ நடந்த பிரச்சினை போல கண்டுகொள்ளாமல் - முக்காடிட்டு ஒளிந்துகொண்டது...

அதே அழுக்கடைந்த முக்காட்டை - கொஞ்சம் கூட சுத்தம் செய்யாமல் அணிந்த நிலையில் - மீண்டும் வரவுள்ள நகர்மன்றத் தேர்தலில் காற்று குடித்து உயிர் பெற எத்தனிக்கும் முயற்சி... என எதுவுமே பார்ப்பதற்கு நன்றாக இல்லை.

இனியேனும், உளத் தூய்மையுடன் - வெளிப்படையாக - அனைவரையும் அரவணைத்த நல்ல நிர்வாகத்தை அரசுப் பதிவுடன் தருவார்களானால், அப்படியொரு அமைப்பு நமதூருக்கு அவசியமே!

பொறுத்திருந்து பார்ப்போம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிறந்த மாடித் தோட்டத்திற்கு ஊக்கப் பரிசு! கத்தர் கா.ந.மன்றம் நடத்திய மாடித்தோட்டம் பயிற்சி முகாமில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதை்தான் எதிர்பார்த்தோம்!
posted by Hameed Rifai (Jeddah (KSA)) [21 February 2016]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43201

மிக அருமையான நிகழ்ச்சி! என்னைப் போன்றவர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிகழ்ச்சி!

பொதுவாகவே கத்தர் காயல் நல மன்றத்தின் சிந்தனைகள் முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளதாக உணர்கிறேன். கல்வி, மருத்துவம் என தனி நபர்களுக்கு உதவி என்ற போக்கில் எல்லோரையும் போல் செல்லாமல், பொதுமக்களுக்கு மொத்தமாகப் பயனளிக்கும் வகையிலேயே அவர்களின் செயல்திட்டங்கள் அமைந்துள்ளன.

நோயைக் குணப்படுத்தும் முயற்சிகளை மற்றவர்கள் செய்துகொண்டிருக்க, நீங்களோ நோய்க்கான ஊற்றைக் கண்டுபிடித்து அடைக்க முயற்சிக்கிறீர்கள்.

“ஊற்றை அடைத்துவிட்டால் ஆற்றை அடைத்துவிடலாம்” என்ற முதுமொழிக்கேற்ப உள்ளது உங்களின் இச்செயல்!

செய்தியைப் பார்த்த எங்களுக்கு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் கி்டைத்துள்ளது. என்றாலும் நேரில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டதே என்று என்னைப் பெரிதும் ஆதங்கப்பட வைத்துவிட்டது.

இதுநாள் வரை வியர்வை சிந்தி வேலை செய்த நம் பெண்கள் இன்று வீட்டு வேலைகள் அனைத்திற்கும் கருவிகளை வாங்கி வைத்துக்கொண்டு, வேளாவேளைக்கு சாப்பிடுவதை மட்டும் வழமையாகக் கொண்டுள்ளதால், வியர்வை மூலம் வெளியேற வேண்டிய கழிவுகள் உடலுக்குள்ளேயே தங்கி, பல புதுப்புது நோய்களுக்கு அவர்களைத் தள்ளி, ஆங்கில மருத்துவமனைகளின் நிரந்தர அடிமைகளாக மாற்றி வருவதை நாம் அனைவருமே அனுபவித்து வருகிறோம்.

இந்நிலையில், தமக்குத் தேவையான காய்கறிகளை தாமே பயிரிட பயிற்சியளித்ததும், அதில் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகளவில் மகளிர் கூட்டம் திரண்டதும், நம் பெண்களின் வருங்காலம் ஒளிமயமாகப் போவதை உணர்த்தும் தலைப்பிறைக் கீற்று!

இனி வருங்காலங்களிலும் இதுபோன்ற பயனுள்ள பல செயல்திட்டங்களை வடிவமைத்து நம் மக்களுக்கு உடல் நலனும், வருமானமும் பெருக வழியமைக்க இம்மன்றத்தாரைக் கேட்டுக்கொள்கிறேன்.

அதுபோல, இவர்களது இந்நிகழ்ச்சியை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, பிற மன்றங்களும் இதுபோன்ற துறைகளில் வேறுபட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் பணி செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.

எல்லாம்வல்ல அல்லாஹ் இந்நிகழ்ச்சியை நடத்திய கத்தர் காயல் நல மன்றத்தினருக்கும், ஏற்பாடுகளை இணைந்து செய்த அனைவருக்கும் நிறைவான நற்கூலிகளை ஈருலகிலும் வழங்கியருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் தொலைபேசி நிலைய முன்னாள் கோட்ட துணைப் பொறியாளர் ஜெயக்கொடி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Hameed Rifai (Jeddah (KSA)) [17 December 2015]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42462

எனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உண்மைலேயே மனது மிகவும் கணக்கிறது கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர கூடியவர் BSNL சேவையை மக்கள் விரும்பும் படி செய்தவர்

இவரின் கணிவான பேச்சுக்காகவே BSNL வாடிக்கை ஆன அநேகபேர்களில் நானும் ஒருவன்.

உயர்ந்த பதவியில் இருந்தாலும் என்றுமே அதை அவர் வெளிக்காட்டி கொள்ளாமல் கடை நிலை ஊழியன் போல உண்மையாக உழைத்தவர்.

இவரை போல நல்ல உள்ளம் கொண்டோர் இவரை பின் பற்றி சேவை ஆற்றிட வேண்டும் அதுவே அவர்க்கு செய்யும் நன்றி உன்ரவாகும்.

அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் துணைத் தலைவர் கொடுத்த புகார் அடிப்படையிலான வழக்கில் சமூக ஆர்வலர் நிரபராதி என விடுதலை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [04 December 2015]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42360

“வயசாயிடுச்சே? ஏதாவது சங்கத்துல, சதுக்கைல, கட்டிடங்கள்ல உக்காந்து கதை பேசி காலத்தை ஓட்டுவோம்!” என்ற நம்மூரின் சராசரி பெரியவர்களுக்கு இடையில், தனக்குச் சரியெனப் பட்டதை எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிந்து சொல்பவரும், இறுதி வரை அதில் நிலைத்து நிற்பவரும்தான் எங்கள் மீசை மாமா!

அப்பேர்ப்பட்ட அவர்கள் மீதே பொய் வழக்குத் தொடுக்க ஒருவர் நாடுகிறார் என்றால், அதற்கான பலனை இந்த உலகத்திலேயே அவர் காண்பது நிச்சயம் - இன்ஷாஅல்லாஹ்!

அல்லாஹ் அவர்களின் ஆயுளை சரீர சுகத்துடன் நீளமாக்கி வைத்து, இரு உலகிலும் நிறைவான நற்கூலிகளை வழங்குவானாக, ஆமீன்.

இன்னும் ஒரு சமூக ஆர்வம் கொண்ட இளைஞர் மீதும் இதேபோன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரும் அதைத் துணிவுடன் சந்தித்து வருகிறார். விரைவில் அதிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம், இன்ஷாஅல்லாஹ்!

இப்போது தெரிகிறதா? பொதுவேலை என்றால் ஏன் யாரும் முன்வருவதில்லை என்று???

ஜா..........க்கிரதை! வழக்கு போட்டுருவோம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தைக் கலைக்க கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காக்கா காசெல்லாம் கரைஞ்சிடுமே....?
posted by Hameed Rifai (jeddah) [19 August 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41690

“என்னப்பா, நம்ம நிர்வாகி வீட்டு கல்யாணம் வருதே? அதையொட்டி வழலை போல தாய்ச்சபை சார்பில் ஒரு பொதுக்கூட்டம் போட்டுறலாமே?”

“சும்மா இரிப்பா! பொதுக்கூட்டம் போட்டுட்டா அப்பறம் காக்காட்ட வாங்குற காசெல்லாம் அதுலயே கரைஞ்சிடுமே.....? அப்புறம் கைச்செலவுக்கு எங்க போவ?”

“அதுவும் சரிதான்! அப்டீன்னா ஏதாச்சும் செலவு கொறச்சலா செய்வோம்... ஆங்....! ஒரு ஆர்ப்பாட்டம் வச்சா என்னா?”

“ஐடியா சரிதான்! என்ன ஆர்ப்பாட்டம்? யார கண்டிச்சி வக்கிறது?”

“இருக்கவே இருக்காங்க தலைவி! எவ்ளோ அடிச்சாலும் வாங்கிக்குவாங்க! காக்காக்கும் மனச குளிர வச்சாப்ல இருக்கும்! கைச்செலவுக்கும் கனிசமா கெடைக்கும்ல?”

“அது சரீ... என்ன காரணத்த சொல்ல?”

“காரணத்தையா தேடனும்? ஊர்ல கடும் வெயில்! தலைவிதான் அதுக்கு காரணம்ன்னு சொல்லி பண்ணுவோம்... ஒருவேள மழை பெஞ்சிட்டா, அதுக்கும் அவள்தான் சதி செஞ்சாம்போம்... நம்புறதுக்கு நம்மகிட்ட வெவரங்கெட்ட மக்கள் இருக்கிற வரைக்கும் நமக்கென்ன கவலை?”

இப்படி ஒரு உரையாடல் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் நடந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

மண்டைய குடையுற சில கேள்விகளை வழமை போல கேட்டுத் தொலைக்கிறேன்...

(1) நகராட்சி, பேரூராட்சி போன்ற ஒரு உள்ளாட்சியில ஊர் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்ற மட்டும்தான் தலைவருக்கு அதிகாரம் உண்டு! அதைத் தாண்டி, அக்காரியம் நடைபெறவில்லையெனில், அது அந்த உள்ளாட்சியின் மூத்த அதிகாரியான ஆணையாளர் / செயல் அலுவலர் இடம் கேட்க வேண்டியது என்ற அல்ப விஷயம் கூட ஒரு அகில இந்திய கட்சிக்குத் தெரியாதா?

(2) இந்திய அரசியல் சாசனத்தை மதிப்பது தாய்ச்சபையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று என்று மேடைக்கு மேடை மார்தட்டுவீர்களே...? இங்கு தலைவி அரசியல் சட்ட விதிகளுக்கு மாற்றமாக நடைபெற்ற ஒரு கூட்டத்தைத்தானே அவர் ஆட்சேபித்து வழக்கு தொடுத்து, தடையாணை பெற்றுள்ளார்? அதில் என்ன தவறைக் கண்டுவிட்டீர்கள் தாய்ச்சபைத் தங்கங்களே?

(3) ஜமாஅத் பிரதிநிதிகள் எல்லாம் கலந்துகொள்வார்கள் என்று உங்க ஆர்ப்பாட்ட செய்தி, நோட்டீஸ்களில் அறிவித்திருந்தீர்களே? அவங்களுக்கு அழைப்பிதழ் அட்ரஸ் மாறி போயிடுச்சா அல்லது உங்கள் தரத்தை அவங்களும் விளங்கிக் கொண்டார்களா?

(4) கடந்த முறை ரயில்வே துறையை எதிர்த்து நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூட தமுமுக, எஸ்டிபிஐ, ததஜ போன்ற அமைப்புகள் எல்லாம் கலந்துகொண்டனவே? இப்ப அவங்களுமா உங்களை நம்பவில்லை?

அவங்க போயிட்டுப் போறாங்க! “வஞ்சிக்கப்பட்ட வாலிபர்” கூடவா உங்களை நம்பவில்லை? போன ஆர்ப்பாட்டத்தில் மக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு முன்னணியில் செயல்பட்ட அவரையும் காணோமே? தெரியாமத்தான் கேட்கிறேன்.

(5) சரி போகட்டும்! நீங்க எந்த அரசியல் சாசனத்தை மதிப்பதாகக் கூறுகிறீர்களோ அதைச் செயலில் காண்பித்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு எதிராக, அரசியல் சட்டங்களை சிறிதும் மதிக்காமல் சட்டத்திற்குப் புறம்பாகக் கூட்டம் நடத்திய நான்கு கவுன்சிலர்களும் கூட உங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்களே? அவர்களில் ஒருவரை மேடையில் வைத்து அழகு பார்த்துள்ளதோடு, இருவருக்கு மைக் பிடித்து பேசவும் செய்துள்ளீர்களே.....? எப்போது இவர்களெல்லாம் மனிதப் புனிதர்கள் ஆனார்கள்?

(6) சரி, வந்தது வந்துட்டாங்க! “ஏம்ப்பா! உங்க நகராட்சியில ஆயிரத்தி சொச்சம் தீர்மானம் போட்டிருக்கீங்களே? அதில் பெரும்பாலானவை செயல்வடிவம் பெறவில்லை என்று குதிக்கிறீர்களே? அப்படி செயல்வடிவம் பெறாததைக் கண்டித்து, ஏன் இந்த வேலையைச் செய்யவில்லை என தலைவி அவர்கள் பலமுறை ஆணையருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியிருக்காங்களே...? நீங்க எத்தனை முறை இதுகுறித்து ஆணையரிடமும், உயர் அதிகாரிகளிடமும் தட்டிக் கேட்டிருக்கீங்க?” என்று கேட்பதற்குக் கூட யோசனை வராத அளவுக்கா குச்சி மிட்டாய் சூப்பிட்டு இருந்தீங்க?

மொத்தத்தில் சொல்கிறேன்! நம்ம ஊர்ல இரண்டே வகையான கட்சிகளும், அமைப்புகளும்தான் படைகளாக உள்ளன. (1) காக்காவின் காலடியே தஞ்சமெனக் கிடக்கும் கூலிப்படை. (2) என்ன சோதனை வந்தாலும், எத்தனை பேர் இழித்தும் பழித்தும் பேசினாலும், கொண்ட கொள்கையில் சிறிதும் மாற மாட்டேன் என நெஞ்சை நிமிர்த்தி வீறுநடை போடும் கூட்டம்.

இதில் இரண்டாவது வகையில் நாங்கள் இல்லவே இல்லை என்பதை சத்தியமிட்டுச் சொல்வது போலவே உள்ளது அகில இந்திய கட்சியான உங்கள் தாய்ச்சபையின் உள்ளூர் தங்கங்களின் செயல்பாடுகள்!

ஊர்ல உள்ள சமுதாய அமைப்புகள்ல அடிக்கடி “தாய்ச்சபை” செய்தியில் இடம்பெறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள், “அடடே... பரவாயில்லையே?” என்று நினைத்து வரும் நேரத்தில், மிகச் சரியாக எங்களுக்கு உஷார் காட்டி, “சேச்சே... எங்கள அப்டியெல்லாம் தப்பா நெனச்சிடாதீங்க”ன்னு சொல்லிட்டீங்களே! சபாஷ்!!!

நகராட்சிய கலைக்கனுமாம் நகராட்சிய! பேசாம உங்க கட்சிய கலைச்சிட்டுப் போங்கன்னு சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் எங்களுக்கு? ஆனால், இது நீங்கள் துவக்கிய கட்சி அல்ல! நம் சமுதாயத்தையும், அதன் அடையாளத்தையும் பாதுகாக்க காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற இறைநேசரால் துவக்கப்பட்ட கட்சி என்பதால், அதுபோன்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. வெளியிலிருக்கும் நானே இந்தளவுக்கு தாய்ச்சபையை மதிக்கும்போது, உள்ளே இருந்துகொண்டு இப்படி பண்றீங்களே? நியாயம்தானா??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: CRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Hameed Rifai (Jeddah) [19 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40215

சாளை அப்துல் ரசாக் காக்கா!

அ.தி.மு.க. பிரமுகர்கள் சர்வே எண் 278இல் ஆய்வு தகவல் பார்த்தேன், புல்லரிச்சிப் போய்டிச்சு போங்க. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தையும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தையும் ஒரே இடத்தில் பார்த்த மாதிரி ஒரு புத்தணர்ச்சி ஏற்பட்டுடிச்சி! அமீரக பேராசிரியர் லுக்மான் இல்லாத குறைதான் போங்க!

அது கிடக்கட்டும் ...

தமிழ் வாசிக்கத் தெரிந்தா மட்டும் போதாது காக்கா! தெளிவா எழுதவும் தெரியனும்!! உண்மையாகவும் எழுத தெரியனும்!!! கொஞ்சம் சிரமம்தான்... இருந்தாலும் முயற்சி செய்ங்க காக்கா!

// ஆனால், முதன்முறையாக, MEGA உறுப்பினர் தம்பி முத்து இஸ்மாயீல், ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். // C&P

இது யாருடைய வாசகம்?

உங்க வாசகம்தானே?

முத்து இஸ்மாயில் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருப்பது நீங்கதானே?

சரி, அந்த உண்மை என்னான்னு - முத்து இஸ்மாயில் கருத்தையும் நீங்கதான் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறீர்கள்: "சாலை - CRZ-1 பகுதிக்குள் வருகிறது" என்றும் சேர்த்து.

முத்து இஸ்மாயில் ஒத்துக்கொண்டதுல, பாதிதான் உண்மை, மீதி உண்மை இல்லை - அப்படின்னு நீங்க நினைச்சா - அத தெளிவா நீங்கதானே சொல்லியிருக்கனும் காக்கா? தெளிவா சொல்ல உங்களை எது தடுக்குது? ஊரில் இருந்து உங்களுக்கு வஹீ - அபுதாபிக்கு இன்னும் வந்து சேரவில்லையோ?

பரவாயில்ல லுக்மான் காக்கா, இன்னும் காலம் கடந்து போகல! இப்பவாச்சும் சொல்லுங்கோ காக்கா!!

... 1, 2, 3 - முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் தந்த 5.5 ஏக்கர் நிலம், CRZ-1 வரைமுறைக்குள் இல்லை, இல்லை, இல்லை ...

---அப்படின்னு சத்தமா சொல்லுங்க காக்கா, விளங்க மாட்டேங்குது. காத்துதான் வருது போங்க. சத்தத்தை காணோம்.

அப்படி - உண்மைய சொல்ல தைரியம் இல்லைன்னா, விபரம் பத்தலைன்னா, அமைதியா இருங்க! இன்னும் கொஞ்....ச நாள்தான்! எல்லாம் விளங்கும் இறைவன் நாட்டத்துடன்!

// நீங்கள் குற்றச்சாட்டு சொல்லும், //கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புதுறை) போன்ற பகுதிகள் மட்டும் தான் அந்த CRZ- பகுதியில் வருமா? அல்லது, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, தீவுத் தெரு, மங்களவாடி, மரைக்கார்பள்ளி தெரு போன்ற பகுதிகளும் வருமா?// என்ற எனது கருத்துக்கும் (Comment Reference Number: 40199) பதில் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். // C&P

செத்துச்சு போங்க, CRZ என்றால் என்ன என்ற அடிப்படை அறிவும் இல்லாமதான் இத்தனை வளவளா, கொழகொழவா? கோடை விடுமுறை தொடங்கிருச்சு! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க! தீர்ப்பாய நீதிபதி - உங்களுக்கும், உங்க சகாக்களுக்கும், ஐக்கிய வர்த்தக சபைக்கும் சேர்த்து CRZ பாடம் சொல்லித் தருவார். அப்ப தெரிஞ்சுக்கலாம்.

// //http://kayalpatnam.com/shownews.asp?id=15744

இப்போது சொல்லுங்கள் யார் பொய் சொல்கிறார்கள், நீங்களா, நானா? //

என் கருத்து பதிவுக்கும், நீங்கள் மேற்கோள் காட்டும் செய்திக்கும் என்ன தொடர்பு? நான் இந்தச் செய்திக்குக் கருத்து பதிந்து இருக்கிறேனா? இருந்தால் அதையும் காட்டுங்கள். //// C&P

கெட்டுச்சு போங்க, 278 இடத்துக்கும் - DCW ஓடைக்கும் 300 மீட்டர் தூரம், 200 மீட்டர் தூரம் என்று கதை அளந்தீங்களே? 278 நிலத்திலேயே, அந்த ஓடை ஓடுதூன்னு விளக்கும் செய்திதான் அது ...

தாங்க முடியல காக்க! உங்களுக்கு விளக்கம் சொல்லியே, என் சீவன் போய்டும் போல இருக்கு காக்கா.

ஏதோ சொல்வாங்களே, நீங்க அறிவாளியா, இல்லை அறிவாளி மாதிரி நடிக்கிறீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: CRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Hameed Rifai (Jeddah) [18 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40212

சகோதரர் லுக்மான் அவர்களுக்கு,

// தம்பி ஹாமீத் ரிபாயீ, // இந்த நிலத்தை (278) ஒட்டினார்போல் - கிழக்கில் கடல், வடக்கில் ஓடை. அதாவது மீட்டர் கணக்கு, கிலோ மீட்டர் கணக்கு அல்ல, ஒட்டி! ஒட்டி!! ஒட்டினார் போல!!! அதாவது 0 மீட்டர்!!!! // இது உங்கள் கருத்து. (Comment Reference Number: 39629)

இந்த கருத்து நீங்க சூப்பரா உட்ட ரீலா, தம்பி? // C&P

புனைப்பெயரில் ரீல் உடுவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கும்போது, நமக்கு அதுக்கெல்லாம் எங்கே நேரம் காக்கா?

எது உண்மை, எது பொய் என்பதை காயல்பட்டணம்.காம் செய்தி எண் 15744 இல் உள்ள கீழ்க்கண்ட வாசகத்தை பார்க்கவும்.

செய்தி எண் 15744
----------------

அவரது நிலத்தின் - 278/2 உட்பிரிவில் அமைந்துள்ள நிலவியல் பாதையை ஒட்டி, 4 ஏக்கர் நிலம் தராமல், அதன் மேற்கு கோடியில் நிலத்தை ஒதுக்கியதற்கு காரணம், DCW நஞ்சு வாய்க்கால் - சர்வே எண் 278இன் வடக்கு மத்தியில், நிரந்தரமாக உள்வாங்கியுள்ளதால், அப்பகுதி - CRZ-1 வரைமுறைக்குள் வருவதாகும்.

http://kayalpatnam.com/shownews.asp?id=15744

இப்போது சொல்லுங்கள் யார் பொய் சொல்கிறார்கள், நீங்களா, நானா?

// என்னுடைய கமேன்ட்சில், இந்த நிலத்துக்கு செல்லும் பாதை CRZ-ல் வருகிறது என்று எங்கு குறிப்பிட்டுள்ளேன்? அதை (C&P) பண்ணி காட்ட முடியுமா? // C&P

என்ன காக்கா அதுக்குள்ள உங்க கமெண்ட்ட மறந்துட்டீங்க?

// ஆனால், முதன்முறையாக, MEGA உறுப்பினர் தம்பி முத்து இஸ்மாயீல், ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். // சர்வே எண் 278 ல் அமையவிருக்கும் CRZ வரைமுறைக்குள் வராத எரிவாய்வு மையம் மற்றும் குப்பை கிடங்கிற்கு செல்லும் CRZ வரைமுறைக்குள் வரும் சாலை குறித்து நமது நகராட்சி என்ன முடிவு எடுத்துள்ளது..? // (C&P)

இப்ப என்ன சொல்லப்போறீங்க, நான் முதல் பாதியைத்தான் உண்மை என்று சொன்னேன், இரண்டாம் பாதியை இல்லை என கூறப்போகிறீர்களா? சொன்னாலும் சொல்வீங்க!

எதுக்கு காக்கா, வளவளன்னு பேசிகிட்டு ஜவ்வு மாதிரி இழுக்கணும்.

நான் அடித்துச் சொல்கிறேன்: முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கிய 5.5 ஏக்கர் நிலம் - நிலத்தின் பெரும் பகுதி CRZ - 1 வரைமுறைக்குள் வருகிறது.

நீங்கள் அடித்தோ, உதைத்தோ, சத்தியம் செய்தோ, சொல்லுங்கள் - 5.5 ஏக்கர் நிலம் முற்றிலும் CRZ வரைமுறைக்கு வெளியிலேயே உள்ளது என்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: CRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இத்தனை காலம் சொன்னது பொய்தான் என்று இப்பவாவது ஒப்புக்கொண்டீர்களே? சந்தோஷம்!
posted by Hameed Rifai (Jeddah) [18 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40200

“மொத்த இடத்தையும் CRZ என்று சொன்னவர்கள் தற்போது ரோடு மட்டும்தான் CRZ என்கிறார்கள்" என்று சாளை லுக்மான் அவர்கள் கூறுகிறார்கள்.

MEGA இந்த இடத்தை திட்ட அமைவிடம், சாலை வரும் இடம் என என்றுமே பிரித்துக் கூறியதில்லை. அது வெளியிட்டுள்ள பிரசுரங்களே அதற்கு சான்று.

சாலை இல்லாமல் திட்ட இடம் கிடையாது; திட்டமில்லாமல் சாலைக்கு அவசியமும் கிடையாது. இது விஷயத்தில் MEGA அன்றும், இன்றும் தெளிவாகவே உள்ளது. இத்திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள இடம் CRZக்குள் வருகிறது. அவ்வளவுதான்!

ஆனால், தங்களைப் போன்றவர்கள்தான் சாலைக்கான இடம் CRZக்குள் வருவதாக தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.

அரசு விதிகளைப் பொருத்த வரை சாலையையோ, மீதமுள்ள இடத்தையோ பிரித்துப் பார்க்காது. இரண்டும் சேர்த்துதான் திட்டத்திற்குரிய இடம். அதை மறந்துவிட வேண்டாம்!

சாலை CRZக்குள் வருகிறது என இப்போது கூறியிருக்கிறீர்கள். இந்த உண்மையை மறைத்துதான் 2 ஆண்டுகளாக, “CRZ அல்லாத இடத்தைத் தரப்போகிறோம்..... CRZ அல்லாத இடத்தைத் தரப்போகிறோம்....” என தொடர்ந்து பொய்யைக் கூறி வந்துள்ளார்கள் / வந்துள்ளீர்கள். அது இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

ஏனையோருக்கு வேண்டுமானால் இவ்விடம் குறித்த தெளிவு இல்லாமலிருந்திருக்கலாம். நிலத்தைத் தருபவர்களும், அதற்குப் பரிந்துரைத்தவர்களும், அதை ஆதரித்தவர்களும் உண்மையாளர்களாக இருந்திருந்தால், “சாலை மட்டும் CRZ எல்லைக்குள் வருகிறது, மற்றவை CRZக்குள் இல்லை” என அப்போதே கூறியிருக்கலாம். அப்படிக் கூறியிருந்தால் இத்தனை செய்திகளுக்கும், இந்த விவாதங்களுக்கும் அவசியமே இருந்திருக்காது.

அந்த இடத்தில் CRZ எல்லையைத் தொடாமல் சாலைக்கு இடம் கொடுக்க வாய்ப்பே இல்லை என்பதை விபரமறிந்தவர்கள் நன்கு அறிவர். ஆனால், ஏதோ இப்பதான் புதிதாகக் கண்டுபிடித்தது போல தங்களைப் போன்றவர்களும், ஐக்கியப் பேரவையும், முன்னாள் நகர்மன்றத் தலைவரைச் சார்ந்தவர்களும்தான் ஏமாற்றி வந்திருக்கிறீர்கள் என்பதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் உணர்த்தியிருக்கிறீர்கள்.

ஆக மொத்தத்தில், சாலை CRZக்குள் வருகிறது என சாளை லுக்மான் காக்கா அவர்கள் ஒப்புக்கொண்டிருப்பதற்கு மிக்க சந்தோஷம். அடுத்த நடப்புகளையும் விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW நிறுவனத்தின் 57வது கால்கோள் தின விழா! நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எது விளம்பரம் சாமி அவர்களே???
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [25 March 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 39835

“கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த அமைப்பு பல்வேறு வழிகளில் உறுப்பினர்களாகிய எங்களை அவமானப்படுத்தி, எங்கள் மீது அவதூறுகளை கூறி வந்ததோ, அதே KEPA அமைப்பு...” CP

காயல்பட்டினம் நகர்மன்றத்திலேயே வயதால் மூத்தவரான சாமி அண்ணன் அவர்களின் இந்த பதில் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதே.....?

KEPA அமைப்பு நகராட்சி அரசியலில் எந்தக் காலத்தில் தலையிட்டது என்று கூற இயலுமா சாமி அண்ணன் அவர்களே???

“...இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்க எங்களைக் கேட்டுக் கொண்டதாலும், அவர்களின் தூண்டுலின் பேரிலேயே இத்தீர்மானம் வந்ததாலும் நாங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதுதான் உண்மை.” CP

ஊரின் மிக முக்கியமான விஷயம் இது என்பதை உணராமல், ஊரில் எத்தனை அமைப்புகள் உள்ளன - அந்த அமைப்புகளில் யார் யார் உள்ளனர் என்ற அடிப்படையைக் கூட விளங்காமல், KEPAவில் உள்ளவர்களை எங்களுக்குப் பிடிக்கவில்லை, எனவே நாங்கள் ஒத்துழைக்கவில்லை என்று பெரியவரான தாங்கள் கூறலாமா? இது ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகா சாமி அண்ணன் அவர்களே???

“இருப்பினும் அக்கூட்டத்தில், நாங்கள் நேரடியாக DCW சென்று பார்த்து, தனியாக தீர்மானம் கொண்டு வருவோம் என்று அறிவித்ததையும் நினைவு படுத்துகிறேன்...” CP

ஒரு பலமான, அரசியல் செல்வாக்கு மிக்க, பண பலம் கொண்ட நிறுவனம்..... அப்படிப்பட்ட நிறுவனத்தை - தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தன் துணிச்சலான நடவடிக்கைகளால் எதிர்த்து வரும் தலைவி அவர்கள் கொண்டு வந்த இந்தத் தீர்மானம் விளம்பரம் என்று சொன்ன சாமி அண்ணன் அவர்களே....!

“அப்படி என்றால் - கட்டிடம் கட்டியாச்சு, உற்பத்தி துவங்கிடுசி (ஆனால் இதுவரை துவங்கவில்லை என்பது வேறு விஷயம்), அதனால் தீர்மானம் வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு, அப்புறம் ஏன் “நேரில் ஆய்வு செய்ய வேண்டும்????” என்று முடிவெடுத்தீர்கள் சாமி அண்ணா???

சரி, முடிவெடுத்து 3 மாதங்கள் ஆகிவிட்டதே.....? ஆய்வு செய்துவிட்டீர்களா அல்லது உங்களது இந்த அறிவிப்பை விளம்பரம் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா சாமி அண்ணா.....???

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW நிறுவனத்தின் 57வது கால்கோள் தின விழா! நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அவசரப்பட்டு திட்டாதீர்கள்!
posted by Hameed Rifai (Jeddah) [23 March 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39813

இந்த விழாவில் பங்கேற்ற கவுன்சிலர்களை அவசரப்பட்டு யாரும் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்.....

(1) கால்கோள் விழாவை தவறுதலாக கம்பெனி மூடு விழா என்று நினைத்து சென்றிருக்கலாம்.....

(2) ஒருவேளை நெடுஞ்சாலை மூடப்பட்டிருக்கலாம். எனவே, அடைக்கலாபுரம் வழியாக சென்றால் சுற்ற வேண்டுமே என்று கருதி, ஆலையின் உள்ளே குறுக்குப்பாதையில் செல்ல நேர்ந்திருக்கலாம். அந்த நேரத்தில் எதேச்சையாக விழா நடந்த இடத்தில் யாராவது வற்புறுத்தி உட்கார வைத்திருக்கலாம்.....

(3) ஏற்கனவே அவர்கள் ‘ஆய்வு செய்ய’ திட்டமிட்டிருந்தார்களல்லவா? அதை தனிப்பட்ட முறையில் செய்வதை விட, அரசு அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், பிரமுகர்கள் முன்னிலையிலேயே செய்ய திட்டமிட்டிருக்கலாம்.....

(4) ஒருவேளை நகர்மன்றக் கூட்டத்தையே அங்கு நடத்தக் கூட திட்டமிட்டிருக்கலாம்.....

ஹூம்... எல்லாம் நம்ம தலையெழுத்து! கொஞ்சம் கூட உப்புச்சப்பு இல்லாத காரணங்களைக் கூறி தலைவியை எதற்கு எடுத்தாலும் இவர்கள் எதிர்த்துக் கொண்டிருந்தபோதே நான் நினைத்தேன் இவர்களுக்கு ஆலையின் பின்புலம் இருக்கும் என்று! (ஏனெனில், தலைவி அவர்கள் எல்லா வகையிலும் இந்த ஆலைக்கு இன்றளவும் எதிர்ப்பைப் பதிவு செய்துகொண்டே இருக்க, இவர்களோ சம்பந்தம் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.)

என் நீண்ட நாள் எண்ணத்தை உறுதிப்படுத்துவது போலவே உள்ளது நம் ‘மரியாதைக்குரிய’ கவுன்சிலர்களின் நடவடிக்கை!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
99
பக்க எண்
1/10
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved